Testimonials-தமிழ்

நான் முதலில் வரும்பொழுது அதிகமான மனக்குழப்பத்துடன் இருந்தேன். மனபயம் இருந்ததது எதிர்மறை எண்ணங்கள் இருந்தது எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். அதிகமான தாழ்வு மனப்பான்மை இருந்தது. பசியின்மை இருந்தது. தினமும் குளிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிலும் ஆர்வமாக கலந்து கொள்ளமாட்டேன். தற்பொழுது எதிர்மறை எண்ணங்கள் இல்லை.மனபயம் குறைந்துள்ளது. தினமும் குளிக்கிறேன். ஓரளவு சநதோஷமாக உள்ளேன். குறைந்தளவு நம்பிக்கை உள்ளது. சிறிதளவு செய்யும் வேலையில் நாட்டம் உள்ளது. மனக்குழப்பம் குறைந்துள்ளது. இந்த மருத்துவத்தில் நான் சிறப்பாக உணர்கிறேன்.
திரு. ராஜ்குமார்
இங்கு நன்றாக கவனித்து கொள்கிறார்கள்.உதவி செய்கிறார்கள். முன்பை விட நல்ல முன்னேற்றம் இருக்கிறது. மருத்துவமனையின் சேவை மற்றும் உணவு எல்லாம் நன்றாக இருக்கிறது. கோவம் கொள்ளாமல் நன்றாக கவனித்து கொள்கிறார்கள்.
அசென்
நான் முதலில் இந்த மருந்தை சாப்பிட பயந்து மறுத்தேன். அதனால் நான் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டேன். டாக்டர் மருந்தை போடும்படி சொன்னார். நான் கேட்கவில்லை. தற்போது மருந்து சாப்பிட்டு நல்ல நிலையில் உள்ளேன். டாக்டர்க்கு மிக்க நன்றி. தற்போது எனக்கு வந்துள்ள இந்த பயத்தையும் குணப்படுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கையோடு வந்துள்ளேன். நான் இங்கு சிகிச்சை பெற்றதால் குணமடைந்துள்ளேன். நான் டாக்டரிடம் சொன்ன அறிகுறிகள் எல்லாம் தற்போது இல்லை. மிகசிறந்த முறையிலான சிகி ச்சையை தந்துள்ளீர்கள்.
மல்லிகா
என் அம்மா அவர்களுக்கு மனநல பாதிப்பு கடந்த எட்டு மாதமாக இருந்தது. எனது அம்மாவை திருச்சி ஆத்மா மனநல மருத்துவ மனைக்கு அழைத்து வந்து மாதம் ஒருமுறை சிகிச்சை அளித்து வந்தேன். தற்பொழுது உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர்கள் நலம் பெற சிகிச்சை மேற்கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறன்.
செல்வம்.
என் மனைவி குணமடைய நமது ஆத்மா மருத்துவமனை அழைத்து வந்ததில் என் மனைவிக்கு 90% குணம் அடைந்துவிட்டது. ஆத்மா மருத்துவமனை நிர்வாகம், டாக்டர் நர்ஸ் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.
ஹமீது
எனக்கு 5 வருடமாக மன நடுக்கம் பயம் கை கழுவுதல் அருவருப்பு போன்ற சில பிரச்சனைகள் உள்ளன. இந்த ஆத்மா மருத்துவமனையில் பரிசோதனை செய்து மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தேன். பின்னர் 75% குணமடைந்து உள்ளேன் ஐயா.
ஜெகன்
நான் விருத்தாச்சலத்திலிருந்து வருகின்றேன். என்னை திருமதி.மீராரமேஷ் அவர்கள் காணோலி மூலம் என்னை சந்தித்தார்கள். ஏன்னை மிகவும் அன்புடன் வாழ்க்கையின் நிலைமையை விசாரித்தார்கள். மிகவும் அருமையான ஆலோசனைகள் எனக்கு தந்தார்கள். புணத்தை எப்படி சேமித்து வைப்பது என்பதை பற்றியும் விளக்கினார்கள். நூன் ஏற்கனவே மன நிலை பாதிக்கப்பட்டு தங்களின் நிறுவனத்தை நாடி, மாத்திரைகள் எடுத்து கொண்டு தற்போது நலமுடன் இருப்பதாக கூறினேன். திருமதி.மீராரமேஷ் அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டு என்னை வாழ்த்தி நலமுடன் இருக்க வாழ்த்தினார்கள் திருமதி மீராரமேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெத் ராணி
நான் முதலில் தங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். 20.12.2013-ல் எனது மகன் மிகவும் மன அழுத்ததில் அமெரிக்காவிலிருந்து வந்தார். தங்கள் மருத்துவனையில் மருத்துவம் பெற்று 2014-ல் திரும்ப அமெரிக்கா சென்றார். தற்போது பழைய நபராக ஆக மிகவும் நல்லமுறையில் அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். ஏன் வாழ்நாளில் தங்கள் மருத்துவத்தையும், வழிகாட்டுதல்களை என் உயர் உள்ளவரை மறக்கமாட்டேன். அதேபோல் எங்கள் பக்கத்து வீட்டுப்பையனும் தங்களிடம் மனநோய் சிகிச்சை பெற்று திருமணமாகி மிகவும் செல்வாக்காக இருக்கிறான். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
ராஜி
மனநல ஆலோசகரின் கவுன்சிலிங் செய்தது நன்றாக இருந்தது. ஏனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆவர்கள் பேசிய விதம் நன்றாக இருந்தது. ஏனக்கு சொந்தமானவர்கள் போல் பேசினார்கள். எனக்கு மன நிறைவாக இருந்தது. அவர்கள் என்னிடம் கேட்ட விதம் பிடித்திருந்தது. எனக்கு சரியாக ஆக வேண்டும் என்று அவர்கள் எண்ணிய விதம் பிடித்திருந்தது. அவர்களிடம் இன்னும் சில நிமிடம் பேச வேண்டும் போல் இருந்தது. எனக்கு சரியாக வேண்டும் என்ற எண்ணமும் இறைவனிடம் வேண்டுகிறேன் என்ற எண்ணமும் எனக்கு பிடித்திருந்தது.
ரீடா
நான் கடந்த 4 வருடங்களாக மனநல மருத்துவர் மரியாதைக்குரிய மருத்துவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களிடம் மனநலம் சம்பந்தமான சிகிச்சைகள் எடுத்து கொண்டு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இன்றைய அவசரகரமான இயந்திர சூழ்நிலையில் இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் மனநலம் சம்பந்தமாக கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைகள் அவசியமான ஒன்று. நமது மருத்துவர் இருப்பதால் திருச்சி மாநகர மக்கள் மனநல பாதிப்பு இல்லாமல் மிகவும் சந்தோசமாக நலமுடன் வாழ்ந்து வருகிறோம். திருச்சி மாநகரில் நம்பிக்கையுள்ள மருத்துவர்களில் நம் மருத்துவர் முதன்மையானவர். ஆவரைப் போல் இதுவரை கண்டதில்லை மக்களின் நம்பிக்கை பாத்திரமானவர். ஓவ்வொரு குடும்பத்திலும் விளக்கேற்றிவயர். அவரது பிணயாளர்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அவ்வளவு கருணை நிறைந்தவர்கள். சமயபுரம் மாரியம்மன் அருளால் எங்கள் மருத்துவம் அவரது பணியாளர்க்ள அனைவரும் மற்றும் அவரது மருத்துவமனையும் தொடர்ந்து மென்மேலும் சிறப்புற என்றும் இறைவனிடம் பிரார்திக்கிறோம்.
மாது
நான் குடும்ப பிரச்சனை காரணமாக ஆத்மா மருத்துவமனைக்கு மனநல ஆலோசனைக்கு வந்திருந்தேன். 3 மணி முதல் 4 மணி நேரம் வரை பேசினோம். எனக்கு தாய் இல்லை இன்று என் தாயை பார்த்து பேசியதுபோல் இருந்தது. என் மன வலியை போக்கி ஆதரவாக பேசினார்கள். என்னுள் உள்ள வலியை போக்கி; மன வலிமை அளித்தார்கள். ஆத்மார்த்தமாக பேசினார்கள். ஆத்மாவில் (ஆஸ்பத்திரி) நிஜ நல்ல ஆத்மாக்கள் (டாக்டர் மீரா) போன்றவர்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டி ஆத்மார்த்தமாக கூறி விடை பெறுகிறேன். நன்றி
நிஷா
இன்று நான் ஆத்மா மனநல மருத்துவமனைக்கு டாக்டரை பார்த்து மனநல ஆலோசனைக்கு வந்தேன். அப்போது முதலலில் மனநல ஆலோசனைக்கு ஆக டாக்டர் அவரை அவர்களிடம் சந்தித்து பேசினேன். ஏன் படிக்கும் வயதில் இருந்து, வேளைக்கு சென்றதில் இருந்து விசாரித்தார்கள் எல்லாம் கூறினேன். மனதிற்க்கு சந்தோசம் அளித்தது. மிக்க நன்றி
கிருஷ்
ஆத்மா மனநல மையத்தின் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக மனநல ஆலோசனை மூலமாக நாங்கள் நிறைய பயனடைந்துள்ளோம். ஓவ்வொரு முறையும் கொடுக்கப்படும் ஆலோசனை ஏற்புடையதாகவும். பயனுள்ளதாகவும் அமைந்தது. நாங்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்கும் போது அதன் வார்த்தையின் பயனை அடைந்துள்ளோம். சில நேரங்களில் மருத்துவரிகளின் ஆலோசனைகள் எங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொள்ள முற்படவில்லை. ஆனால் இது போன்ற கவுன்சிலிங் எங்களுக்கு தேவை என்ற மனநிலையில் தான் இருக்கிறோம். ஆகவே இந்த கவுன்சிலிங் எங்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது.
கருண்
வணக்கம், டாக்டர்.திரு. அருண்குமார் மற்றும் கவுன்சிலர் பிரியா அவர்களிடம் சிகிச்சை பெற்றேன். சிகிச்சைக்கு பின்பு எனக்கு ஏற்பட்ட பயம், படபடப்பு நன்றாக குறைந்துள்ளது. ஏனக்கு சிகிச்சை அளித்த ஆத்மா மருத்துவமனை மற்றும் டாக்டர்.அருண்குமார் மற்றும் பிரியா அவர்களுக்கு மிகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
குமார்
வணக்கம், 20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட கருகலைப்பின் காரணத்தால் மனநலம் குன்றியது, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. ஆத்மா மருத்துவமணைக்கு வந்தோம் டாக்டர் இராமகிருஷ்ணன் மருத்துவரை அனுகினோம். ஒரு மாதத்தில் நலம் பெற்றேன். மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது எனது மனநலம் நன்றாக உள்ளது.
திருமதி.ரே
டாக்டர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு (திரு.மு) ஆகிய நான் மனநலம் பாதிக்கப்பட்டு, ஆத்மா மருத்துவமணைக்கு வந்த போது மனசேர்வு இருந்தது. மருத்துவமணை வந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு இப்பொழுது நல்ல முறையில் இருக்கிறேன். நான் எனது பேருந்து ஓட்டுநர் பணியை நல்ல முறையில் பார்க்கிறேன். எல்லா வேலைகளையும் நல்ல முறையில் பார்க்கிறேன்.
திரு.மு
இந்த மருத்துவமணைக்கு 2 வருடங்களாக வருகிறோம். என்னுடைய மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தது. நான் ஒவ்வொரு மாதம் வரும்போது என்னுடைய உடல்நிலையில் முன்னேற்றம் அடைகிறது. இப்பொழுது ஒரு 80% குணமடைந்துவிட்டேன். அதற்கு நான் மருத்துவருக்கு நன்றி கூறிகிறேன். என்னுடைய கோபம், சந்தேக எண்ணம், தூக்கமின்மை இதெல்லாம் இப்போது குணமடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்கு இந்த மருத்துவமணைக்கு நன்றி கூறிகிறேன்.
திரு.செ
நான் ஒரு நோயாளி என் பெயர் ர வயது 38. நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6 மாதங்களாக வெளியில் சிகிச்சை பெற்றுக்கொண்டேன். எதிலும் திருப்பதி இல்லை. என் உறவினர் ஒருவர் ஆத்மா மருத்துவமனையை பற்றி சொன்னார். பின்பு வந்து பார்த்தோம். எனக்கு தூக்கமின்மை, உடல் மரமரப்பு, எரிச்சல், உடம்பில் ஏதோ ஊருவது போன்று எண்ணம், மறதி, கை கால் நடுக்கம் இருந்தது. சிசிச்சை பெற்ற பின் எனக்கு முன்னேற்றம் தெரிகிறது. மருத்துவர் நல்ல முறையில் ஆலோசனை மற்றும் அறிவுரை கொடுத்தார்கள்.
திருமதி.ர
என் மகள் இங்கு 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் மோசமான நிலையில், அதாவது சுயநினைவு இல்லாத நிலையில் சேர்த்தோம். இனி அவள் பழைய படி குணமாவது கடவுள் கையில் என்று வேண்டி, அழுதபடி நான் என் மனைவி, மகன் 3 பேரும் இருந்தோம். கடவுள் நமது டாக்டர் . திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் ரூபத்தில் என் மகளை காப்பற்றிவிட்டார். அது சாத்தியமானது. மருத்துவரும் மருத்துவமணை நிர்வாகமும் எங்கள் மகளை மட்டும் அல்ல 4 பேரின் உயிரையும் சேர்த்து காப்பாற்றினார்கள். என் மகள் போன வருடம் இருந்த நிலைக்கும், தற்போது உள்ள நிலைக்கும், உள்ள வேறுபாடு நேரில் பார்த்தவர்களுக்கும் மட்டுமே தெரியும். எங்களுக்கு தெய்வத்தை விட, கண் கண்ட தெய்வமாக நமது டாக்டர். இராமகிருஷ்ணன் அவர்கள் மட்டுமே, இது வெறும் வார்த்தையல்ல நிஜம். எங்களது அனுபவம். எங்களது பாக்கியம், அனைத்திற்கும் மேலான அக்கரையும், கவனிப்பும், கருணையும் நிறைந்த உள்ளங்கள் வாழும் கோவில் இந்த ஆத்மா மையம். இதன் காரணம் தான் இங்கு பார்க்கப்படும் வைத்தியம், மருந்து மாத்திரைகள் பலனளிக்கின்றன. நடமாடும் தெய்வங்கள் ஆத்மா வாசிகள் சேவை பல்லாண்டுகள் தொடர எங்கள் குடும்பம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். என் மகளுக்கு மறு ஜென்மம் பெற்று தந்துள்ளனர்.
செல்வி. நி தந்தை
நான் இங்கு வரும் பொழுது நான் யார் என் தாய், தந்தை யார் என்று தெரியாது இருந்தேன். யாரையும் அருகில் விட மாட்டேன். பின்பு என் அம்மாவை மட்டும் அருகில் விடுவேன். மற்றவர்கள் வந்தாள் திட்டுவேன். பின்பு தான் என் குடும்பத்தினரை அடையாளம் தெரிய வந்தது. எனக்கு கை, கால் வராது, வாய் குளறி பேசுவேன், மிக அதிக கோபம், நினைவு திறன் இன்றி இருந்தேன். வெளியில் வேறு இடத்தில் விட்டால் வழி தெரியாமல் தவறி சென்று விடுவேன். பல நேரங்களில் வலிப்பு வரும். டாக்டர். இராமகிருஷ்ணன் அவர்கள் கொடுத்த சிகிச்சையால் எனது அனைத்து வகையான நோயிலிருந்து விடுபட்டு வேலையில் உள்ளேன்.
திரு.வி
எங்கள் மகன் (கி) கடந்த 7 வருடங்களாக இம்மருத்துவமணையில் வைத்தியம் பெற்று வருகிறான். திரு. டாக்டர். இராமகிருஷ்ணன் அவர்கள் கொடுத்த வைத்தியம் மிகச்சிறந்த முறையில் உள்ளது. என் மகன் இங்கு வந்த போது இருந்தது விட பல மடங்கு முன்னேற்றம் பெற்றுள்ளான். மருத்துவமணை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது.
திரு.கி தந்தை
நான் கடந்த சில வருடங்களாக மனஅழுத்தம் காரணமாக மிகவும் சிரமம்பட்டு வந்துள்ளேன். அச்சமயம் எனது உறவினர்கள் என்னை மன நல மருத்துவ மையமான ஆத்மாவில் சிகிச்சைக்காக அழைத்தனர் முதலில் மறுத்தேன். பின்பு சிகிச்சைக்கு சம்மதித்தேன். அதுவரை சரியான உறக்கம் வராமலும், சாப்பிட முடியாமலும், மனதில் ஏதோ ஒரு அழுத்தத்தினால் என்னை சிரம்மப்படுத்தி வந்தேன். பின்பு சிகிச்சை எடுத்து எனது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து மிகவும் நலமாக இருக்கிறேன். மனதளவில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.
திருமதி.கா
என் மனைவி மனதளவு உடல் நல குறைவின் காரணமாக 15 வருடங்களுக்கு மேல் சிகிச்சை எடுத்து வருகிறோம். மருத்துவர் நல்ல முறையில் ஆலோசனை மற்றும் அறிவுரைகள் கொடுத்தார்கள். செவிலியர் நன்றாக கவனித்து கொண்டார்கள். முன்பு இருந்த நிலைமையை விட இப்பொழுது பூரண குணமடைந்துளாள். மேலும் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
திரு.அ
வடுகப்பட்டியை சேர்ந்த நான் இங்கு 2017 ஆண்டு அக்டோபர் மாதம் வந்த போது எனக்கு பயம், மனஇறுக்கம், மனஉளைச்சல், சந்தேகம், எதிலும் நாட்டமில்லாமல் இருந்தேன். டாக்டர். இராமகிருஷ்ணன் அவர்கள் கொடுத்த சிகிச்சை மற்றும் ஆலோசனைகளால் நன்றாக உள்ளேன்.
திருமதி. நா