உலக மனநல தின விழிப்புணர்வு பேரணி

அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கொண்டாடப்பட்டது இதை சிறப்பு செய்யும் நோக்கில் இன்று 17/10/2022 திங்கட்கிழமை திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனையுடன் இனைத்து ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்ந்த 380 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர் . பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி தலைமையில் ஆத்மா மனநல மருத்துவமனை மருத்துவர் இராஜாராம் துவங்கி வைத்திட பேரணியானது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தொடங்கி இராஜ கோபுரம் வழியாக ஸ்ரீரங்கம் மேம்பாலம் கடந்து காந்தி ரோடு நெல்சன் சாலை வழியாக கல்லூரி வளாகம் வந்து சேர்ந்தது.
நிகழ்ச்சியை சமூக பணி துறை தலைவர் சித்ராவுடன் இணைந்து ஆத்மா மனநல மருத்துவமனை சார்பாக கரன் லூயிஸ் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *