உலக மனநல தினம் விழிப்புணர்வு பேரணிஅக்டோபர் 10

ஆத்மா மருத்துவமனை மற்றும் அரியலூர் அரசு கல்லூரி இணைந்து உலக மனநல தினம் அக்டோபர் 10 போற்றும் வண்ணம் அரியலூர் மத்திய பேருந்து நிலையம் செந்துறை ரோடு காலேஜ் ரோடு அரியலூர் கடை வீதி அண்ணா சிலை முடிவு வரை 3 கிலோ மீட்டர் தூரம் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மனநலம் காப்போம் மன்னுயிர் வளர்ப்போம் என்ற வாசகத்தோடு மனநலம் சார்ந்த துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது இந்த நிகழ்வை ஆத்மா மருத்துவமனையின் முதன்மை மனநல மருத்துவர் திரு ராஜாராம் அவர்கள் துவங்கி வைத்தார் மற்றும் கல்லூரி முதல்வர் திருமதி மலர்விழி அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மனநலத்துறை தலைவர் நிஷா அகமது அவர்களும் பங்கு பெற்றார் இந்நிகழ்ச்சியை என் எஸ் எஸ் பொறுப்பாசிரியர் வேலுச்சாமி மற்றும் ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் திரு கரன் லூயிஸ் அவர்களும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் இந்நிகழ்ச்சியில் 900 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *